Tuesday 15 July 2014

உறக்கத்தின் மிகுதி













ஆளரவமற்ற அடர்ந்த கானகத்தினூடே
தனித்த இரவுப்பொழுதில்
பாதம் பதித்த பயணத்தின் இடைவழியில்
மூச்சிறைக்க முனகிய ஓசை கேட்டு
விடுப்பதா, அடுப்பதாவென்று அறியாமல்
நடவா கால்களின் நங்கூரத்தை
செவியில் விழுந்த வலியின் உளிகொண்டு சிதைத்து
பாதையற்ற சிறுவெளியில்
தவழ்ந்தும், உருண்டும் சென்று 
நேற்றிரவு நான் தொலைத்த
நிம்மதியுறக்கத்தின் நீண்ட பகுதியைக் கண்டேன்.
தவிப்புடன் தொட்டுத் தூக்க முனைந்ததில்
தொலைந்தது எந்தன் இன்றைய உறக்கத்தின் மிகுதியும்..!

No comments:

Post a Comment