Sunday 20 July 2014

ஆறடி


வானளந்த நிலங்களை
வசப்படுத்திய மாமன்னரும்
அடங்கியது ஆறடிதான்.
வறுமையில் வாடி
நடைபாதையிலுறங்கும்
சின்னவனும் அடங்குவது
ஆறடிதான்.
எல்லாம் எனதென்று
ஏனிந்த தாகம்?
இருக்கும்வரை கொடுப்போம்,
அன்பிலே திளைப்போம்,
வாழ்தல் இனிதாகும்!

No comments:

Post a Comment