இலையுதிர்த்த பனித்துளிகளை சேகரித்து
கோர்த்து எழுதிய உன்பெயர்
இன்னும் முற்றுப்பெறாமலே இருக்கிறது.
சுழன்று வீசும் குளிர்காற்றின் தண்மையில்
விரல்கள் நடுக்கம் பெறுவதால்,
அருகில் வந்து செவ்விதழ்களால் தொட்டுவிடு,
முத்தச்சூட்டில் உனக்கென நானெனும் ஒப்பந்தம் முற்றுப்பெறட்டும்!
No comments:
Post a Comment