Tuesday 29 July 2014

சமரசங்களுக்காய் ஒரு சாகித்தியம்



நிராயுதபாணியிடம் இனியும் பெற்று
கொடுங்கோலன் கையில்
கோலோச்சக் கொடுத்ததாக

பனித்தீவில் மாவடுக்களை உதறி
காயும்வரை பொருத்திருக்க மனமின்றி
ஆழ்கடலில் அள்ளிவீசியதாக

கற்பனையில் பிழை நேர்ந்ததாகச் சொல்லி
கனவுப் பாலங்களைத் தகர்த்து
நினைவுக் கடலில் நீச்சலடிக்கத் தெரியாமல்
மூழ்கித் தொலைவதாக

வழக்காடுதலில் விருப்பமின்றி
விட்டுக் கொடுத்தலை ஏற்று
போதிமர நிழல்தேடும் புத்தனாக

சமரசங்களுக்காய் ஒரு சாகித்தியம்
படிக்கத்தான் தொடங்கியிருக்குதந்த
பாழும் மனது..

பழக்கத்திற்கு இன்னும் வரவில்லை
என்றெழுதிய விண்ணப்பமும்
இன்னும் முடிக்கப்படாமலே….!

No comments:

Post a Comment