நிராயுதபாணியிடம் இனியும்
பெற்று
கொடுங்கோலன் கையில்
கோலோச்சக் கொடுத்ததாக
பனித்தீவில் மாவடுக்களை
உதறி
காயும்வரை பொருத்திருக்க
மனமின்றி
ஆழ்கடலில் அள்ளிவீசியதாக
கற்பனையில் பிழை
நேர்ந்ததாகச் சொல்லி
கனவுப் பாலங்களைத்
தகர்த்து
நினைவுக் கடலில்
நீச்சலடிக்கத் தெரியாமல்
மூழ்கித் தொலைவதாக
வழக்காடுதலில் விருப்பமின்றி
விட்டுக் கொடுத்தலை
ஏற்று
போதிமர நிழல்தேடும்
புத்தனாக
சமரசங்களுக்காய்
ஒரு சாகித்தியம்
படிக்கத்தான் தொடங்கியிருக்குதந்த
பாழும் மனது..
பழக்கத்திற்கு இன்னும்
வரவில்லை
என்றெழுதிய விண்ணப்பமும்
இன்னும் முடிக்கப்படாமலே….!
No comments:
Post a Comment