Wednesday 30 July 2014

கனவுலகப் பயணம்


















அமைதிப் பெருங்கடல்,
அசையும் ஓடம்,
இசையாய் பனிக்காற்றின் ரீங்காரம்,
இதமாய் கரம் பற்றிய நீ,
இனிமையான வாழ்க்கை,
இப்படித்தான் அமையுமென
எல்லோர் கனவும்..

ஆழ்கடலில் பிரளயமாய்,
அதிலமிழும் பல ஓடம்,
ஊடுருவி உயிர் சிலிர்க்கும் பனிக்காற்று,
உக்கிரமாய் பல நேரம் நமை வாட்டும்,

இப்படியே பல ஓடம் கவிழ்ந்தாலும்,
ஏறிய ஓடத்தில்
இறுதி வரை பயணித்து,
கரை தட்டுமென காத்திருக்கும்
கனவுலகப் பயணமாய் வாழ்க்கை.

No comments:

Post a Comment