அதிசயமன்றோ!
நான் பதியம் வைத்த
ரோஜாச் செடியின் பூக்களெல்லாம்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வேளையும்,
ஒவ்வொரு வண்ணத்தில் பூக்கிறது!
அதிகாலையில்
கண்குளிரும் வெண்மையாய்,
இடைப்பொழுதுகளில்
எனை கவனமாய் பொத்தி பாதுகாக்கும்
செந்நிற கோபக் கொழுந்தாய்,
மாலையில்
மயக்கும்,
மந்தகாச பொன்மஞ்சள் வண்ணமாய்..,
இரவிலே
எனை அள்ளி அணைக்கவந்த
பச்சையும், நீலமுமாய்..,
என் காதல் ரோஜாசெடியில்தான்
எத்தனை வண்ணங்கள்..!
No comments:
Post a Comment