Friday 25 July 2014

ஆண் அழக்கூடாதா?
















இதயச் சூட்டில் இறைந்த வார்த்தைகளால்
தனித்தீவில் குடியேறியவளின்
இமைகள் பனிகோர்த்திருந்த பின்மாலை.

தவறெனதென அறிந்தும்
மனப்பந்தலில் மௌனப்பூக்களை மட்டுமே சூடி
கையுறைகளை அனலில் விட்டு வைத்திருந்தேன்.

இருவரின் பொழுதுகளும் இன்னிசையிழந்திருக்க
அவளின் கண்களோ 
கருமேகக் கதவை தட்டியிருந்தன.

விழிக்கோடுகள் சந்திக்காமல் விலகியிருக்க
இமைச்சிறையை பலமாய் நான்
பூட்டியிருந்தேன்.

கனத்திருந்த மணித்துளிகள் கரைந்ததில்
மனமெழுதிய பல நூறு கவிதைகளும்
காரிருளில் மறைந்தன.

மெல்லிய விரல்களின் மென்மை தீண்டலில்
திடுக்கிட்டுத் திறந்த விழிகள் கண்டது
கண்ணீர் தளும்பி நின்ற கருநீலக் கண்களை.

கனியதரங்கள் உதிர்த்த
சாரி யெனும் ஒற்றை வார்த்தையை கேட்ட நொடி
கண்களில் கடல் பொங்க
அவள் மடியில் முகம் புதைத்தேன்.

ஆண் அழக்கூடாதென நினைத்திருந்தேன்
அவள் மடியில் அழுது கரையும்வரை..!

No comments:

Post a Comment