Friday 1 August 2014

காத்திருப்பு




பால்வெளியின் விளிம்புகளில் 
சிறகு விரித்துப் பறந்திருந்த
பல வண்ணமிகு மனத் தும்பிகளில்
உனதும் எனதும் மட்டும் இணைபிரியாமல்
இயைந்திருந்தன

காலச்சுழலின் கோரப்பிடிகளில் சிக்குண்டிராதிருக்க
எல்லைக்கோடு தாண்டிட எத்தனித்தன
அகவெளி துறந்து புறவெளி கடந்து
ஏகாந்தத்தில் நிலைபெற்று
தமதான ஜீவனத்திற்கு
உள் வெளியற்ற அரிய ஒன்றை சிருஷ்டிக்க எண்ணின

பொறுத்திடாத ஏனைய தும்பிகள்
கணிக்க முடியா வஞ்சக முடிச்சுகளையும்
இருள் நேர் இறுக்கிவிடும் சுருக்குகளையுமிட்டு
தாண்டிச் சென்றிடாமல் தடைகளிட்டன

இறுகிய முடிச்சுகளில் 
ஏகாந்தங்களையும் எட்டிப் பறந்தததையும் 
மறந்து மரத்துவிட்டு
அடுத்தோர் பிறப்பிலேனும்
மனம் போல் வாய்க்குமென காத்திருந்தன 
காலச்சுவடுகளின் பாதத்தில்.....

1 comment:

  1. அகவெளி துறந்து புறவெளி கடந்து
    ஏகாந்தத்தில் நிலைபெற்று // ஆஹா.. வாய்த்தால் அது வரம்

    ReplyDelete