உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவாய்
உன் வறுமையை தாழிட்டுப் பூட்டுவாய்
கைவிரல்களில் கலை நயம் ஏகுவாய்
களிமண்ணிலே கவிதைகள் எழுதுவாய்
உடல் முழுவதும் தசையினை இழந்த நீ
உளம் எஃகினில் வார்ப்படம் செய்த நீ
வளம் கொண்டொரு வாழ்வைப் பெற்றிட
வரவேணும் நல் எதிர்காலமே!
No comments:
Post a Comment