Saturday 23 August 2014

தனிமை பயணம்






















பாவ புண்ணிய பங்கீடுகளின்பால்
நம்பிக்கையற்றிருந்தவனின் நடைபாதையில்
தோள் பற்றியெழும்பிய
ஆதரவுக்கேங்கிய உறவுகளின் கணக்கோ
எதிர்பார்ப்பை நிறைவேற்றாத குற்றத்திற்காய்
எள்ளி நகையாடி
தூற்றிப் பொருமியிருந்த
தூய உள்ளங்களின் எண்ணிக்கையோ
வைத்திருக்கவில்லையென
குற்றம் சாட்டப்படிருந்ததையெண்ணி

உணர்ச்சிகள் மரத்திருந்த மனதை
அடுக்களையாக்கி
உற்பத்தி செய்யப்பட்ட
உஷ்ணக்காற்றின் கீற்றுகளை
நீண்ட பெருமூச்சுகளாக்கி
உதிர்த்தவனின் நாசித்துளைகளின் சீற்றம்
புறக்காட்டை சூடேற்றாதிருக்க
தனக்குள் அமிழ்த்தி
தனிமையைச் சுவைத்தபடி
பயணத்தை தொடர்ந்திருந்தான்
உறவுகளால் ஒதுக்கப்பட்ட ஒருவன்..!

No comments:

Post a Comment