Friday 15 August 2014

நிழல் நீரலை

















கருமை படர்ந்த அதிகாலை பொழுதொன்றின்
சூரியச் சுடர் தேடும் கமலத்தின் பின்னசைவில்
விழி சுமந்த கனவுகளின் வெளிச்சக் கோடொன்றின் வீரியத் தாக்குதல் 
நிழல் நீரலையொன்றை பரிணமித்திருந்தது.

வான் தெளித்த தூறல்களில் விளைந்த புதிய அலைகளில்
நிழல் நீரலை நீர்த்துப் போனதால்
கமலம் தன் மலர்ச்சி தடை பட்டிருந்ததாய்
குற்றப் பத்திரிக்கை தயாரித்திருந்தது.

தூர கிழக்கில் தோன்றியவனின் கதிர் வீச்சில்
கட்டவிழத் தொடங்கிய கமலம்
மழை நீர்த்துளிகள் விலக
கனவு விதைத்த நிழல் நீரலை
மறைந்திருந்தாலும்
அழிந்திடாமல் அங்கேயே காத்திருந்ததைக் கண்டு
அகமகிழ்ந்து மணம் பரப்பத் தொடங்கியது.

No comments:

Post a Comment