Friday 8 August 2014

எனது தொல்லை

கார்முகில் சூழ்ந்த கருநிற வானம்
கற்பனை துள்ளும் பனிக்குளிர் வாசம்
கூடடையும் பறவையின் குதூகலத்துடன்
வீட்டினுள் அடியெடுத்து வைத்தேன்

இன்னிசை பொங்கி மனம் நிறப்பி
வீணையின் நாயகனே வாவென்றழைக்க
விம்மிய மகிழ்வுடன்
தாவிச் சென்று அருகமர்ந்து
பொன்னே, மணியே,
கண்ணே, கரும்பே, காவியமே,
மாணிக்க வீணையை மடியிருத்தி
மயக்கும் இன்னிசையை தந்தாயடி

வேண்டும் பரிசளிக்க மன்னவனில்லை
என் மனமாட்சி செய்யும் வீணாவுந்தன்
மன்னவனாதலால்
என்ன வேண்டுமோ கேளென்றேன்
அரும்பிய புன்னகையுடன்
அன்னவள் மொழியுதிர்த்தாள்.

என்றும் என்னவனாய் நீயிரு
எனை மறவா நெஞ்சம் நீ கொள்ளென்றும் சொல்லி
இப்பிறவியில் வேறேதும் வரம் தேவையில்லையென்றாள்.

அன்னவளின் விரல் பற்றி
என் கரத்தில் சிறைவைத்து
உனக்காக பிறந்தவனின் உள்ளத்தில்
உனையன்றி வேறேது கண்மணியே,
எப்பிறப்பும் நீயே எனக்கு வேண்டுமென்று
வரங்கோரி தவமிருப்பேன் ஏந்திழையே என்றேன்!

பாவம்தான் அவள்,
இனிவரும் பிறவியிலும்
எனது தொல்லைகளை தாங்கியிருக்க..!

1 comment:

  1. என்றும் என்னவனாய் நீயிரு
    எனை மறவா நெஞ்சம் நீ கொள்ளென்றும் சொல்லி
    இப்பிறவியில் வேறேதும் வரம் தேவையில்லையென்றாள். // அது போதுமே !

    ReplyDelete