இருள் சேர் கொடு வனந்தனில் புகை சூழ் கருமரமிடை
மருள் நீங் குற நடை பயின்றே. மனம் துணிந்தே புது யுகம் தேடிட
அருள் தானென ஒளிப்பிழம்பென ஆங்கோர் திகழ் வந்தே மெல
விருப்போ அதில் வெறுப்போ இலை வியப்பே எனைத் தொடரல் கொள
மதியிடை வந்து கெஞ்சும் சுடும் பிறழ்களில் இளநெஞ்சே என
விடுபடு வென யெந்தன் மன யிசை அசைவுகளதில் முந்தி யெழ
தடை சிதறிட என்னுள் பல மணம் பரப்பிடும் எண்ணம் எழ
வெண்பனியுறை மேகம் கார் முகில் மறைந்திட வான் பரவிட
எந்தனுயர் நிலையிதுவேயென்றொரு அசரீரியாக..!
No comments:
Post a Comment