Wednesday 6 August 2014

எளிது














எதுவும் எளிதாகத்தான் இருக்கின்றது
கடந்து முடிக்கும்போது
இடைப்பட்ட வலிகளின் எக்காளங்கள்
இதழ்மடித்துச் சிரித்த ஏளனங்கள்
ஏகாந்தமெங்கும் நிறைந்த அழுக்காறின் அனர்த்தங்கள்
புறம்பேசிக் கொண்டாடும் புல்லுருவிகளின் புன்சிரிப்புகள்
உரிமைகளை கவர்ந்து தனதாக்கத் துடிக்கும் தறுதலைகளின் பச்சோந்தித்தனங்கள்
இவற்றின் தாக்கங்களை மறந்து
குறிக்கோளில் கூர்பார்வை கொண்டு பயணித்து
எட்டிப்பிடித்தபின்பு
எல்லாம் எளிதாகத்தான் இருக்கின்றது..!
அதுவரை அனைத்தையும்
எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது!

1 comment:

  1. எதிர் கொண்டால் எதுவுமே எளிதாகி விடும் ...

    ReplyDelete