எனக்குள் பிறந்தொழிந்திருந்த
இரவுக் கனவுகளின் குவியலில்
வளப்பமில்லாத சிதைந்த கனவொன்று
நீட்டியிருந்த நேசக் கரத்தை உதறித் தள்ளி
தன்னிச்சையாயொரு பயணத்தைத் தொடங்கியிருந்த்து
ஆர்ப்பரித்தக் கடலோ
அதையடுத்த முகடோ
நீண்டிருந்த நிலமோ
தடையில்லையென்றுச் சொல்லி
தன் பயணத்தைத் தொடர்ந்திருந்த்து
இடையிருந்த திருப்பங்களிலாவது
ஒற்றைப் பார்வை வீசக்கூடுமெனுமெந்தன் எதிர்பார்ப்பில்
விரிசல்கள் விழுந்திருந்தன
ஆங்கோர் தீவிலதன் பாதம் பட்ட நொடி
கடல் பொங்க, காற்றும் பிளிர
மலை நடுங்க, மத்தளமாய் பூமி குலுங்க
பயணப்பாதை பிளவுபட்டது
கடியதாயினும், கொடியதாயினும்
அவசரமாயொரு கற்பனைப் பாலம் தேவை
எனது சிதைந்த கனவை சென்றடைய..!
No comments:
Post a Comment