உணர்வாக கலந்திட்டாள்
நதியலையில்
நீராடி
நரம்புகளில்
குளிரேற்றி
நகக்கண்வழி
சூடேற்றும்
நினைவுகளின்
சுடரென்றாள்.
பூமலரும்
பொன்புலரி
பூவிதழில்
தேனருவி
பூஞ்சிறகின் இதம்
கொண்டு
பெண்ணவளோ எனை
வென்றாள்.
உருவங்கள்
பொய்த்திடவும்
உலகத்தை
மறந்திடவும்
உருவகமே இல்லாத
உணர்வாக
கலந்திட்டாள்!
No comments:
Post a Comment