Thursday 1 October 2015

உணர்வாக கலந்திட்டாள்


நதியலையில் நீராடி
நரம்புகளில் குளிரேற்றி
நகக்கண்வழி சூடேற்றும்
நினைவுகளின் சுடரென்றாள்.

பூமலரும் பொன்புலரி
பூவிதழில் தேனருவி
பூஞ்சிறகின் இதம் கொண்டு
பெண்ணவளோ எனை வென்றாள்.

உருவங்கள் பொய்த்திடவும்
உலகத்தை மறந்திடவும்
உருவகமே இல்லாத
உணர்வாக கலந்திட்டாள்!

No comments:

Post a Comment