காதல் அத்தனை இனிமையானதா?
கண நேரம் உன்னுடன் இருந்தாலும்
கவிதையாய் பொழிகிறதே!
உன்னுள் என்னை விதைத்தாய்,
என்னுள் நீயே முளைத்தாய்,
பூவனமாய் பூத்து
பண்ணிசைத்து
இனிமையின் விளிம்புகளில்
பயணிக்க வைத்தாய்.
உருவங்கள் துறந்து
உணர்வுகளில்
பிணைந்து கொண்டாய்.
வெண்மேகத் தொலைவுகளை
பாதங்களால்
அளவிடச் செய்தாய்.
கனவு மேடைகளில்
காத்திருந்த பொழுதுகளில்
விரல் தொட்டு
உடல் கலந்து
உயிரை நிறைத்தாய்.
முக்கனியின் இன்சுவையில்
மூழ்கடிக்க வைத்து
மூச்சடைக்குமென்று
உயிர் மூச்சாய் வந்தாய்.
இனி வரும் பிறவியிலும்
என்னோடு இப்படியோர்
காதல்வரம் தர வேண்டி
காலமெல்லாம்
தவம் செய்வேனடியென்
கண்மணி!
No comments:
Post a Comment