Friday 2 October 2015

உத்தரவின்றி உள்ளே வா

ஒரு நொடி பிரிந்த போதும்
உன்னையே நினைக்க வைத்தாய்
நினைத்தெனை உருக வைத்தாய்

கண்மலர் துஞ்சாது
கடுஞ்சுரம் மூச்சாகி
வெளிறிய நாக்கோடு
பேச்சினை குழற வைத்தாய்.

உன் காதலை பருகினால்
கடுஞ்சுரம் போகுமாம்
மலர் கரம் பட்டதும்
விழிமலர் துஞ்சுமாம்
பொன்மதி கண்டதும்
உடல் தளிராகுமாம்

உத்தரவின்றி உள்ளே வா
உனக்கென உயிர் வளர்க்கும்
எனைக் காண!

No comments:

Post a Comment