ஒரு நொடி பிரிந்த போதும்
உன்னையே நினைக்க வைத்தாய்
நினைத்தெனை உருக வைத்தாய்
கண்மலர் துஞ்சாது
கடுஞ்சுரம் மூச்சாகி
வெளிறிய நாக்கோடு
பேச்சினை குழற வைத்தாய்.
உன் காதலை பருகினால்
கடுஞ்சுரம் போகுமாம்
மலர் கரம் பட்டதும்
விழிமலர் துஞ்சுமாம்
பொன்மதி கண்டதும்
உடல் தளிராகுமாம்
உத்தரவின்றி உள்ளே வா
உனக்கென உயிர் வளர்க்கும்
எனைக் காண!
No comments:
Post a Comment