Tuesday 6 October 2015

வாழ்தலின் வேதம்

முத்திரை பதித்த சித்தினி யென்
முற்பலன் தந்த பொற்கிழி.
சித்திரை நிலவின் விண்ணொளி வெண்
சங்கினை யொத்த பத்தினி!

காதலின் பதியம் விழிகளில் பெண்
பாவையின் சதங்கை கால்களில்
ஆடலில் விரியும் வானவில் என்
ஆருயிர் தீண்டும் பூங்குயில்.

தேவதை ஆடல் காவியம் செந்
தேன்மழை சிந்தும் ஓவியம்
பூவையின் பாதத் தாளமாய் என்
பாடலின் சிந்து வாழ்ந்திடும்!

காதலின் வர்ணம் சூடியே எக்
காலமும் என்னுள் வாழ்பவள்.
வாழ்தலின் வேதம் ஆகியே என்
வாழ்வினுக் கருவென் றாகிறாள்!

No comments:

Post a Comment