குரலறியா சங்கீதத்தில்
குழைந்து கொண்டே
நினைவறியா நிழல்பொழுதில்
நெடு நேரம் நின்றிருந்தேன்.
வரம் மறவா வசந்தமென
வந்தவளின் வாசனைகள்
விரலிடுக்கில் மறையுமோர்
நீர்த்துளியாய் மாறியது.
ஆர்ப்பரிக்கும் அடைமழையின்
இடையிலென் விழிக்கசிவோ
வழியும் நிலை மாறி
என்னிலிருந்து சிதற
கருமேகப் பெருமழையின்
வெற்றுப் பிதற்றல்தனை நீக்கி
புயல் மழையாய் கொட்டியது
என் விழியில் கசிந்த துளி!
அத்தனைக்கும் அவள் மழையே
அடர்த்தியெனும் பிடிவாதம்
மூழ்கும்வரை பிதற்றி
மூழ்கியபின் நிசப்தம்!
No comments:
Post a Comment