பிய்த்தெடுங்கள் அவன் முகமூடியை
வாயெல்லாம் பொய் சூடி
அத்தர் பூசி மணந்து
இரவல்களால் அலங்கரித்து
ஆயிரம் புனை பேசி
அவளை மயக்கினான்
அவளும் கூட அப்படித்தான்
ரதியாய் முகஞ்சூடி
கதியே நீயென்று கூறி
சொல்வதெற்கெல்லாம் இணங்கி
சொந்தங்களை மறந்து
காதலாய் மலர்ந்தாள்.
மணம் முடிந்து
மறுவீடு நுழையும்போதே
நீயா அவன்
நீயா அவள்
நிஜ முகங்ள் வெளித்தோன்ற
நித்திரைகள் களைந்து
சிந்தனைகள் பிணங்கி
சொந்தங்களின் பிடியில்
சின்னாபின்னமாகும்
அவர்களின்
உண்மை நிலை
உணரும்படி
அத்தனையும் களைந்து
அம்மணமாய் திரிய விட்டு
வேண்டுமெங்கிலோர்
கோவணமும்
கச்சையும் மட்டும் கொடுத்து
காதலிக்க சொல்லுங்கள்.
உண்மைக் காதலை
உலகறியட்டும்!
No comments:
Post a Comment