Friday 2 October 2015

என் வழி

நானும் நீயும் தனிமையில்
எனக்கான உன் நிகழ்வுகளில்
உனக்கான என் பொழுதுகளில்

மென்கரம் பற்றி
கலகல ஓசை கேட்டு
எனைத் தொட்டோடும் உனைப்
பிடிக்கும் முயற்சியில்
வேண்டுமென்றே தோற்று

அத்துணை மகிழ்ச்சியில்
அணங்குனைக் காண
என்ன தவம் செய்தேனடி!

சிற்சில துணுக்குகளாய் இருந்தாலும்
இணைத்து வைத்தால்
உன் இதயத்தால்
கோர்த்து வைத்தால்
இமயம் தொடும்.

பேரின்பம் பெற
எத்தனையோ வழிகளாம்
எனக்கென்ன தெரியும்
உன் இமை வழியைத் தவிர?

No comments:

Post a Comment