நானும் நீயும் தனிமையில்
எனக்கான உன் நிகழ்வுகளில்
உனக்கான என் பொழுதுகளில்
மென்கரம் பற்றி
கலகல ஓசை கேட்டு
எனைத் தொட்டோடும் உனைப்
பிடிக்கும் முயற்சியில்
வேண்டுமென்றே தோற்று
அத்துணை மகிழ்ச்சியில்
அணங்குனைக் காண
என்ன தவம் செய்தேனடி!
சிற்சில துணுக்குகளாய் இருந்தாலும்
இணைத்து வைத்தால்
உன் இதயத்தால்
கோர்த்து வைத்தால்
இமயம் தொடும்.
பேரின்பம் பெற
எத்தனையோ வழிகளாம்
எனக்கென்ன தெரியும்
உன் இமை வழியைத் தவிர?
No comments:
Post a Comment