பௌர்ணமி இரவில்
நிலவொளி குவியல்
மீண்டும் மீண்டும்
நுரைகளை நிரப்பியுன்
காலடி தேடும்
கடலலை கூட
காதல் கொண்டதோ
கன்னி உன்னிடம்
காற்றலை கூட
குளிர்ந்து, அடர்ந்து,
கவிதையாம் உன்மடி
தேடி வந்ததோ
முழுமதியுந்தன்
கண்ணொளி கொண்டதால்
மேலும் ஒளிர்ந்ததோ
விரல் நுனி கொண்டு
உயிரினை தீண்டிட
விண்ணும் மண்ணும்
ஒன்றாமெனக்கு..,
கனவாய் தோன்றிய
காட்சிகளெல்லாம்
கதையாய்,
கவிதையாய் மாறிட,
கனியே ஒரு நாள்
நிஜமாய் மாறிட
நீ வழி சொல்லடி!
No comments:
Post a Comment