என்னவளின் பிறந்த நாள்.
என்ன வேண்டுமென
ஆவலாய் கேட்டேன்.
மனதிற்குள்
என்னைத்தவிர
என்ன கேட்பாளென
குறுகுறுத்தது.
அருகில் வந்து
மாலைத் தேநீரை தந்து
மந்தகாசப் புன்னகையை கொண்டாள்.
எனக்கென்ன தேவை?
எல்லாமே தந்து விட்டாய்,
உந்தன் புன்னகைக்கு
தவமிருப்பதைத் தவிர
வேறு பொன்னகையில்
விருப்பமில்லை என்றவளை
ஆசையாய் அரவணைத்து
அன்புடன் முத்தமீந்து,
அழைத்துப் போனேன்
அருகிருந்த ஆசிரமத்திற்கு.
எத்தனை வண்ணமின்னும்,
இதழ்களில் புன்னைகை சூடி
அங்குமிங்கும் ஓடியாடும்
தன்னிலை மறந்த
இளம் பூஞ்சிட்டுகள்
இந்த நாள் முழுதும் நாம்
இங்கிருந்து மகிழலாம்
உன்னை நான் அறிவேனன்பே!
ஒரு தினம் இங்கு வாழ்ந்தால்
உன்மனம் உருகும் நேசம்.
எனக்குமே மகிழ்ச்சி கூடும்
நாமிங்கு நாள் முழுதும்
சேவைகள் செய்வோமடி.
ஒரு தின சேவையிங்கு
ஒரு போதும் போதாதெனினும்
இது ஒரு தொடக்கமென்று
இருவரும் கொள்வோமே..
No comments:
Post a Comment