Friday 19 September 2014

மலர்வாயா?

























பூஞ்சிறகாய் நீயென்னுள்
புதுக்கவிதை படிக்கின்றாய்
தேன்மெழுகாய் நானுன்னால்
மனமுருகி வாழ்கின்றேன்

கனல்காற்றாய் நீயென்னை
தகித்தபடி போகின்றாய்
கார்முகிலாய் நானுன்னை
நினைந்தபடி சுழல்கின்றேன்

சுடுதீயாய் நீயென்னை
சுட்டெரிக்கப் பார்க்கின்றாய்
செந்தமிழால் நானுன்னை
சேர்த்தணைத்து வியக்கின்றேன்

விடுகதையாய் நீயெந்தன்
விடைமறைத்து மீள்கின்றாய்
வேதனையின் சுமை நீங்க
உனை நாடி நிற்கின்றேன்

சில நேர பிழை பொறுத்து
சிந்தனையில் குளிரிருத்தி
எனை மீட்க வருவாயா?
இதழ் பூத்து மலர்வாயா?

No comments:

Post a Comment