துடித்துக்கொண்டே யிருக்கும் மனதில்
தூவிச் சென்ற நிகழ்வுகள் மாத்திரம் நிலைத்திருக்க
ஆழப்பதிந்ததென்னவோ
அர்த்தங்கள் மட்டுமே
வார்த்தைகளின் கோர்வைகள்
பாறைமேல் வழுக்கியோடும் நீராக
நினைவுகளில் நில்லாமல்
பேனா களைவதும்
பேரை மறப்பதும்
ஊரைத் துறப்பதும்
உறவைத் தொலைப்பதுமாய் இருந்தவனை
உறுத்திய அவள் கேள்வி
எல்லாம் மறப்பீர்
என்னையுமா
என்றவளிடம்
எப்படிச் சொல்வேன்
எல்லாம் மறந்தாலும்
என்னுயிரை எப்படி மறப்பேனென்று?
No comments:
Post a Comment