Monday 29 September 2014

எப்படி மறப்பேன்




















துடித்துக்கொண்டே யிருக்கும் மனதில்
தூவிச் சென்ற நிகழ்வுகள் மாத்திரம் நிலைத்திருக்க
ஆழப்பதிந்ததென்னவோ
அர்த்தங்கள் மட்டுமே

வார்த்தைகளின் கோர்வைகள்
பாறைமேல் வழுக்கியோடும் நீராக
நினைவுகளில் நில்லாமல்

பேனா களைவதும்
பேரை மறப்பதும்
ஊரைத் துறப்பதும்
உறவைத் தொலைப்பதுமாய் இருந்தவனை
உறுத்திய அவள் கேள்வி

எல்லாம் மறப்பீர்
என்னையுமா
என்றவளிடம்
எப்படிச் சொல்வேன்

எல்லாம் மறந்தாலும்
என்னுயிரை எப்படி மறப்பேனென்று?

No comments:

Post a Comment