Monday 22 September 2014

காதலின் எல்லை


கருமேக மெடுத்து கூந்தலென இழைத்து
இருவிழியில் மின்னல் ஒளி சிந்த அணைத்து
வழிகின்ற கண்ணிற் கணை யொன்றை முடித்து
தெளியாத வானாய் தன் பார்வை கொண்டாய்.

பிரிவில்லை காதல் உணர்வுக்கு என்றும்
விடைபெற்ற காதல் நெஞ்சத்தில் தஞ்சம்
மொழியற்றுப் போன நிமிடங்கள் சொல்லும்
கொடிமுல்லை யுந்தன் அன்பிற்கென் நெஞ்சம்

உயிர் தொட்ட காதல் உருவான தென்று
உனில் வாழுமெந்தன் உயிர் கண்ட பின்பு
உளத் தேடல் செல்லு வழியெங்கு முந்தன்
நிழல் பூத்து நிற்க நிஜமென்று கண்டேன்!

புரிகின்ற வாழ்வில் தவமொன் றுமில்லை,
புரியாத பேர்க்கு வாழ் வொன்றுமில்லை,
விரிகின்ற வானின் எல்லைக்கு ளில்லை
வழிந்தோட கண்டேன் காதலின் எல்லை!

No comments:

Post a Comment