Tuesday 2 September 2014

யாசக யாகம்


















விரித்து வைத்த வானப் போர்வையில்
விதைத்து வைத்திருந்த
வித்தியாசப் பதிவுகளில்
விளைந்த ஒன்றின் பூவெடுத்து
மென்மூச்சின் இழைதொடுத்து
சூடிக் கொடுக்கவென காத்திருந்தாய்

விரவியிருந்த கருமேகக் கூந்தலிடை
விரல் கொண்டளைந்து
காதல் மணம் பரப்பும்
கவின்மலரெனச் சூடி மகிழ வந்தேன்

வெக்கைச் சூழல்கள் பரவிட
தளிர் யாக்கையெங்கும் தகித்திட
கடிமண இசைக்கென காத்திருந்த
கற்பனைக் குதிரைகள் தறிகெட்டோட

கரைந்தோடி கடல் கலந்த நினைவுகளை
மீண்டும் மேகமாக்கி மனவான்புகவேண்டி
யாசக யாகம் வைத்து இறைஞ்சத் தொடங்கினேன்

கடுஞ்சூரியன் கருணை புரிவானா?

No comments:

Post a Comment