கீழ்திசை வானில் ஆழிப்பேரலைகளெழுந்து
காதல் கொண்ட கொண்டலைகளுடன் கலந்து
சண்ட மாருதத்தின் சாயல் கொண்டன
இடி மின்னல்களை தன்னுள் பொதிந்து
எனது தற்காப்பு எல்லையை
தகர்க்கும் எண்ணத்தில் விரைந்தன
ஆதவனோ அவசரமாக விடை பெற்றிருந்தான்
கொடுங்கோலனின் வீச்சுக்கு
இரையாவேனோவென்று
என்வனத்து மரங்கள் தாண்டவமாடின.
சீறிய சந்தேக இடிகளும்,
வெட்டிய விஷம மின்னல்களும்
கொட்டிய கேள்விக்கணைத் துளிகளும்
என்மேல் பாய்ந்த வேகத்திற்கு
ஈடுகொடுக்க இயலுமாவென்னும் எனது சிந்தையை
தூரமிருக்கச் சொல்லி
எனைக் காத்திருந்தன எனதெழுத்துக் குடைகள்..!
No comments:
Post a Comment