Friday 19 September 2014

எனதெழுத்துக் குடைகள்

















கீழ்திசை வானில் ஆழிப்பேரலைகளெழுந்து
காதல் கொண்ட கொண்டலைகளுடன் கலந்து
சண்ட மாருதத்தின் சாயல் கொண்டன

இடி மின்னல்களை தன்னுள் பொதிந்து
எனது தற்காப்பு எல்லையை
தகர்க்கும் எண்ணத்தில் விரைந்தன

ஆதவனோ அவசரமாக விடை பெற்றிருந்தான்
கொடுங்கோலனின் வீச்சுக்கு
இரையாவேனோவென்று
என்வனத்து மரங்கள் தாண்டவமாடின.

சீறிய சந்தேக இடிகளும்,
வெட்டிய விஷம மின்னல்களும்
கொட்டிய கேள்விக்கணைத் துளிகளும்
என்மேல் பாய்ந்த வேகத்திற்கு
ஈடுகொடுக்க இயலுமாவென்னும் எனது சிந்தையை
தூரமிருக்கச் சொல்லி
எனைக் காத்திருந்தன எனதெழுத்துக் குடைகள்..!

No comments:

Post a Comment