மழைப்பூக்களைச் சுமந்த
மாரிக்கால மேகக் கூட்டமொன்றின் வருகை
அவ்வயல் பரப்பின் குளுமைக்குக் காரணமாயிருந்தது
சிலுப்பிக் கொண்டு முகம் திருப்புமோவென
எதிர்பார்த்திருந்த கதிர்களும்
வரவேற்பு கானமொன்றை
காற்றுடனிணைந்து இசைக்கத் தொடங்கியிருந்தன
விரல்களின் பிடியினின்று நழுவிய கைக்குடை
காற்றில் மிதந்து
கார்மேகக் காதலனைச் சென்றடையப் பறந்தது.
குளிரில் மீட்டபட்ட வீணை நரம்புகள்
எழுப்பிவிட்ட உத்வேகத்தில்
நழுவிச் செல்லும் கைக்குடையைப் பற்றவோ
அக்குளிர் மழையுடன் காதல் கொண்டு பறக்கவோவென்று
என் திசையை நிர்ணயிக்க
எண்ண இறக்கைகளை விரிக்கலானேன்
No comments:
Post a Comment