உதிரும் முன்னரே உலர்ந்து போய்விடும்
உதட்டின் நுனிப் பிறந்த வார்த்தைகள்
உள்ளத்துடிப்பின் ஓசைகள் அடக்கியே
ஊமையின் நாடகம் ஆடிடும்
பருகிய வேதனை சாறினை உமிழவே
வழியின்றி பொழுதுகள் கழிந்திடும்
மென் தலை பெருத்ததாய் உணர்ந்திடும் போதிலும்
புதைமணல் தேடியே அடங்கிடும்
கைவிரல் நெருக்கிய ஒலியிழை கேட்குமுன்
கசப்பினை விழுங்கிடும் வாழ்க்கையும்
கண்களில் துளிர்த்தவை பொங்கிடும் என்றே
கடந்திடும் சடுதியில் வாசலை
இத்தகை வாழ்க்கை எதற்கென அறியா
எத்தனை உயிர்கள் இப்பூமியில்
விட்டதும் பட்டதும் தொட்டதும் கொட்டிய
விடத்துளி விழுங்கியே வாழ்ந்திடும் ஜீவனே..!
No comments:
Post a Comment