Monday, 29 September 2014

அழியும் இயற்கை

























கனிமரத் தோப்புக்குள் காலடிவைத்த வேளை
காய்த்தும், பூத்தும், கனிந்தும் கலந்திருந்த மரங்களினிடை
கழுத்தை நீட்டி பசியாற முற்பட்டபோது

வான்மேகங்களிடையே நடந்த
வழக்காடுதலில்
வெளிச்சப் பிழம்பொன்று விரைந்திறங்கி
எந்தன் விழிகளையும் தாக்கியது

பற்றிக்கொண்ட மரங்களின்
தீ நாக்குத் தாக்குதலில்
புசிக்கவிருந்தவை உதிர்ந்தொழுகின

உடன் பெய்த கண்ணீர் மழையுடன்
இணைந்த கொடுங்காற்றில்
இலைகளும் கிளைகளை துறந்தன

ஒற்றை இலை மாத்திரம்
முகத்தின்முன் பறந்துவந்து
மூக்கின்மேலமர்ந்து
உயிர்போகும் தருவாயில்
உன்பசியாற்ற எனை தருகிறேன்
ஏற்பாயாவென வினவியது

ஒளியிழந்த பார்வையுடன்
ஒற்றையிலையை தாங்கிய மூக்குடன்
அவ்விடம் விட்டகன்று
பதியமிட்டேனும் இதனுயிர் காப்பேனென்று
உள்ளத்தில் உறுதிபூண்டு விரைந்தேன்

அழியும் இயற்கையை காக்க
என்னாலானது அவ்வளவே..!

No comments:

Post a Comment