இமை பேசும் மொழிக்கெந்தன்
இள நெஞ்சம் பரிசாகும்
இதழ் சிந்தும் தேனமுதென்
இதழ் தேடும் வரமாகும்.
சுவையெல்லாம் கூடியிரு
கருவிழியென் களமாகும்.
சுந்தரியுன் கரம் பிடிக்க
சொர்கமேயென் வசமாகும்.
செவிமடலின் மேலசையும்
சிறுகூந்தல் இசையாகும்
செங்கனியின் செழுமையிரு
கன்னத்தின் வளமாகும்.
கவிபேசும் காதலரின்
கனவெனது வரவாகும்.
கண்மணியே நம்வாழ்வு
கற்கண்டின் சுவையாகும்!
இனிய வரிகள்
ReplyDeleteபணி தொடர
இனிய வாழ்த்துகள்.
This is my web
https://kovaikkavi.wordpress.com/about/
இனிய கற்கண்டின் பாகாய் தேன் தமிழின் ஊற்றாய் தமிழுக்குச் சுவை சேர்க்கும் இனிய கவிதை
ReplyDelete