தெளிவற்ற வானம் தந்த
நிழல் பாதையில்
பூத்துவாலையாய்
நீர் திவலைகள் மேல் தெளிக்க
பாதச்சுவடுகள்
பதியாமல் நடந்தபடி நான்
வேட்கையற்ற பொழுதுகளில்
என்னுள்ளம்
விரவி கிடக்க
ஓசையற்ற சங்கீதம்
செவிகளில் மட்டும்
இதழ் தொட்ட
துளி மழை நீரில்
உன் விரல் தொட்ட
மருதாணி வாசம்
எப்படி வந்தது
நிலம் பதிந்த
நீர் திட்டுகளில்
விளக்கொளியின்
வர்ண ஜாலங்களிலும்
உன் புன்னகையே
பூத்து கிடக்கிறது.
கனவு தேசத்து பாதையிலே
கரம் பிடித்த வேளைகள்
மீண்டும் மீண்டுமென் நினைவில்
சுவை கூட்டப்பட்ட
செந்தேனாய்
சிதறி ஓடுகிறது.
மழை நீரில் நனைந்தாலும்
உள்ளுக்குள் தாகம்
ஊற்றாகப் பெருகி
உமிழ் நீரையும்
வற்றிப்போக செய்ய
துவளும் பாதங்களை
திருத்தி நேர் வைத்து
உனைத் தேடி
உனைத் தேடி,
இனியும்......
கனவுக்குள் ஒரு தேடும் பயணம் கரம் கோர்த்த அன்புத் துணையுடன் மனதில் நேசமென்னும் வாசத்துடன்.
ReplyDelete