Tuesday 16 December 2014

பொக்கிஷம்















நீ கொடுத்த புத்தகத்தின்
எழுதாத பக்கத்தில்
எனது விழிகளமர்ந்து கொள்ள
இறக்கைகள் விண்ணில் பறக்கத் தொடங்கின

நொடிக்குள் ஓராயிரம் வார்த்தைகளைப் பிரசவித்து
ஒட்டி வைத்து அழகு பார்க்க
உணர்வலங்காரத் தேரோட்டம் ஆரம்பமானது

மலர்வனத் தோட்டமாய்
மந்தகாசம் வீசத் தொடங்கிய பக்கம்
அழுக்காறும், விகாரமும் கொண்ட
அவன் பார்வையில் மட்டும்
நச்சுப் பாம்புகள் குடிகொண்டிருப்பதாகத் தோன்ற

புத்தகம் கைமாறாது
பாதுகாப்பதே போராட்டமாக
பொக்கிஷமாய் கொண்டு
பூமிக்கடியில் புதைத்து வைத்தேன்,
என்றேனு(று)ம் நான்

எடுத்து வாசிக்கவேண்டுமென…!

No comments:

Post a Comment