Tuesday 16 December 2014

வேண்டும்

















மழை நாளிலுந்தன் மடிசாய வேண்டும்
மலரொத்த விரலென் தலை கோத வேண்டும்
அழல் பூண்ட கண்கள் குளிர் காயவேண்டும்
அன்பென்னும் தேசம் நமை யாள வேண்டும்

மலையொத்த சுமைகள் மறைந்துதிர வேண்டும்
மனமெங்கும் மகிழ்ச்சி மனுவாக வேண்டும்
நிலைபெற்ற நேசம் நிதம் பெருக வேண்டும்
நினைவுக்குள் நீயே வரமாக வேண்டும்

உயிரோடு பேசும் விழி சேர வேண்டும்
உன் கோபம் அன்பின் விதையாக வேண்டும்
விடிவானத் தென்றல் இசைபாட வேண்டும்

விலகாது நாமும் இணைந்தாட வேண்டும்

No comments:

Post a Comment