Tuesday 16 December 2014

ரட்சிப்பாயா
















நினைவுகளில் நீ நிதம்
புதிதாய் பூத்துக்கொண்டேயிருக்கிறாய்

நிச்சலனப் பொழுதுகளின் காது மடல்களை
நீவி விட்டுக்கொண்டுமிருக்கின்றாய்

நாசியரும்புத் துளைகளில்
நறுமணத் தென்றல் வீசுகிறாய்

கடுங்கோடையின் காலை வெம்மைகளில்
கற்பனை சாமரம் வீசுகின்றாய்

நிழல் தேடுமென் நேரப் பங்கீடுகளில்
நீளப் பந்தலிடுகிறாய்

இருந்துமெனை அவ்வப்போது
உலர் உதடுகளால் உச்சாடனம் செய்கிறாய்

கனல் பார்வைகளால்
களி நடனம் புரிகின்றாய்

எனது ஏக்கமும் தாக்கமும் நீயாக
இதயக் கூறுகளில்
இருவேறு உணர்வுகளும் படிய

இயல்பினை மீட்க வழியின்றி
உன்னிடமே சரணாகின்றேன்

ரட்சிப்பாயா

No comments:

Post a Comment