Tuesday 16 December 2014

கேள்வி




















சுழன்றடித்த பேராசை சூறைகாற்றில்
அகப்பட்ட மேகத் தூவல்களை
மென்மையென மெத்தனமாய் நினைத்திருக்க
அவையோ கடுங்கோபக் காற்றாய்
கபளீகரஞ்செய்யத் துடித்தது கண்டு

நங்கூரமிட்ட மனக்கால்களை
நாற்புற நதியலைகளில் மூழ்கவிடாமல் நிறுத்தி
நல்லெண்ணக் கரங்கொண்டு
சுழல்காற்றைப் பற்றிச் சுழற்றிவிட

அகண்டு விரிந்து
கட்டுத்தளையறுத்து
கைப்பற்றியிருந்த கள்ளத்தனங்களை
வான்மழையில் கரைத்து
உதிர்க்கத் தொடங்கியது

மேல்விழுந்த துளிகளில்
ஒன்றிரண்டு கண்ணீர் முத்துக்களுடன்
பொறாமைப் புழுதியும் கரைந்திருக்க

மாசுடுத்திய மாண்பு கொண்டு
மாய்க்கத் துடிப்பவைகளை
வாழ்த்துப் பாசுரம் படிப்பதா
வெறுத்துப் பழிப்பதாவென

கேள்வியிலாழ்ந்தேன்

No comments:

Post a Comment