Tuesday 16 December 2014

மரணமென்றது

















பரந்து விரவிக் கிடந்தவொன்று
கருவென்று உடலுடுத்தி பிறப்பென்றது

உணர்வுருவின் வசமாகி சுயமிழந்தது
உறவுகளின் பிணைப்பில்
திளைத்து நின்று சுகமென்றது

உற்றவை பெற்றவை
கற்றவை கொண்டு
வெற்றியென்றது

இழந்த நொடித்த
பதறிய சிதறிய கணங்களில்
துயரென்றது

சலிப்புற்று ஓர் நாள்
உடலுடைவுதறியெறிந்து
புறப்பட்டு
உலவுதலற்ற உறைதலாய்
நிலைத்தன்மை கண்டுவிடயேன்

மரணமென்றது..

No comments:

Post a Comment