பரந்து விரவிக் கிடந்தவொன்று
கருவென்று உடலுடுத்தி பிறப்பென்றது
உணர்வுருவின் வசமாகி சுயமிழந்தது
உறவுகளின் பிணைப்பில்
திளைத்து நின்று சுகமென்றது
உற்றவை பெற்றவை
கற்றவை கொண்டு
வெற்றியென்றது
இழந்த நொடித்த
பதறிய சிதறிய கணங்களில்
துயரென்றது
சலிப்புற்று ஓர் நாள்
உடலுடைவுதறியெறிந்து
புறப்பட்டு
உலவுதலற்ற உறைதலாய்
நிலைத்தன்மை கண்டுவிடயேன்
மரணமென்றது..
No comments:
Post a Comment