அந்த உணவரங்கத்தில் அமைதி நிலவியது. நானும் எனது மூன்று நண்பர்களும் சேர்ந்து இரவு உணவுண்ண சென்றிருந்தோம். எங்களுக்குத் தேவையான உணவு பதார்த்தங்களை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது அருகாமை மேசையில் ஒரு வயதான தம்பதியினர் வந்து அமருவதைக் கண்டோம்.
வந்து அமர்ந்ததும் அருகில் வந்த வெயிட்டரிடம் தங்களுக்குத் தேவையான ஐட்டங்களை இரண்டிரண்டாக ஆர்டர் செய்தனர். சிறிது நேரத்தில் எங்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது அந்த முதிர்ந்த தம்பதியினருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
இரண்டு பேருக்கும் உணவு வழங்கப்பட்டபோதும் அந்த பெரியவர் உணவுண்ணுவதை பார்த்தவாறும், தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தவாறும் அந்த முதிய பெண்மணி உணவுண்ணாமல் இருந்தார்.
எனக்கோ பொறுமையின்றி எழுந்து சென்று, “அம்மா, உங்களுக்கும் உணவு வழங்கப்பட்டுவிட்ட்து. அது சூடு ஆறுவதற்குள் நீங்களும் உண்ணலாமே, ஐயா உணவுண்டு முடிக்கும்வரை ஏன் காத்திருக்கின்றீர்கள்? எவ்வளவு பாசமானாலும், உணவை ஏன் காத்திருக்கவைக்கவேண்டும்” என்று கேட்டேன்.
அதற்கு அந்த பெண்மணி பொறுமையாக என்னைப் பார்த்து சொன்னார், “ எனக்கு அவருடைய பல்செட் வேண்டும்?”
No comments:
Post a Comment