துள்ளிவிளையாடும் மீன்களுமற்ற
நிசப்த ஒலியுண்டு
நீண்ட மௌனத்தில் ஆழ்ந்திருந்த அக்குடில்
மௌன கதை கற்ப்பிப்பதற்காக
மந்தகாசமாய் எனையழைத்தது
நீள்மூச்சு வாங்கி
நடந்தே நான் வருவதாகக் கூற
காற்றுடன் அலைவரும்
கடுமழை உடன் வருமெனச் சொல்லி மறுத்தது
மூச்சுக் காற்றைப் புறந்தள்ளிப் புறப்பட
உயிரற்ற முடத்தின் மௌனம்
மௌனக் கதையைவிட சுவாரசியமென
காற்றென்னைக் கடத்திப் போனது
யாரேனும் மௌனம் கற்கே வேண்டுமெனில்
காற்றினிடம் வழிகேட்டு
இனி என்னிடம் வரலாம்..!
No comments:
Post a Comment