Tuesday 16 December 2014

மௌனம் கற்கே



















துள்ளிவிளையாடும் மீன்களுமற்ற
நிசப்த ஒலியுண்டு
நீண்ட மௌனத்தில் ஆழ்ந்திருந்த அக்குடில்
மௌன கதை கற்ப்பிப்பதற்காக
மந்தகாசமாய் எனையழைத்தது

நீள்மூச்சு வாங்கி
நடந்தே நான் வருவதாகக் கூற
காற்றுடன் அலைவரும்
கடுமழை உடன் வருமெனச் சொல்லி மறுத்தது

மூச்சுக் காற்றைப் புறந்தள்ளிப் புறப்பட
உயிரற்ற முடத்தின் மௌனம்
மௌனக் கதையைவிட சுவாரசியமென
காற்றென்னைக் கடத்திப் போனது

யாரேனும் மௌனம் கற்கே வேண்டுமெனில்
காற்றினிடம் வழிகேட்டு

இனி என்னிடம் வரலாம்..!

No comments:

Post a Comment