பளபளத்த வெங்கலக் கும்பாவில்
வாரியிட்டப் பழஞ்சோற்றில்
பிழிந்தெடுத்த கைப்பிடி சாதத்தில்
மையமாயொரு குழி செய்து
சுண்டவைத்த புளிக்குழம்பையொழித்து
அள்ளி வாய்வைத்து ருசிக்கும் பாட்டியிடம்
எனக்கொரு வாயென்று விளம்பினேன்.
வாடா ராசாவென
வாஞ்சையாய் ஊட்டிவிட
வாய்கொள்ளாச் சோற்றை
எச்சிலொழுகத் தின்றயெனக்கு
இன்றும் அச்சுவையின்
அமுதம் கிட்டவில்லையென
ஆதங்கம்தான்
ஒருவேளை அதுதான்
தேவர்களின் தேவாமிர்தமோ
No comments:
Post a Comment