Tuesday 16 December 2014

தேவாமிர்தம்

பளபளத்த வெங்கலக் கும்பாவில்
வாரியிட்டப் பழஞ்சோற்றில்
பிழிந்தெடுத்த கைப்பிடி சாதத்தில்
மையமாயொரு குழி செய்து
சுண்டவைத்த புளிக்குழம்பையொழித்து
அள்ளி வாய்வைத்து ருசிக்கும் பாட்டியிடம்
எனக்கொரு வாயென்று விளம்பினேன்.

வாடா ராசாவென
வாஞ்சையாய் ஊட்டிவிட
வாய்கொள்ளாச் சோற்றை
எச்சிலொழுகத் தின்றயெனக்கு
இன்றும் அச்சுவையின்
அமுதம் கிட்டவில்லையென
ஆதங்கம்தான்
ஒருவேளை அதுதான்

தேவர்களின் தேவாமிர்தமோ

No comments:

Post a Comment