Tuesday, 16 December 2014

அந்தரத்தில்


















எங்கிருந்து வந்ததென்று அறியாத ஒளிச்சிதறல்களில்
எனை இணைத்துக்கொள்ளும் ஆவலுடன்
ஒற்றைப் பிழம்பை இறுகப் பற்றி
எனதிறக்கைகளையும் விரித்துக்கொண்டேன்

மனோவேகத்தையும் மிஞ்சியதொரு வேகத்தில்
பூலோகத்தை கடந்து
விண்ணிற்குள் புகுந்து
வேற்றுக் கிரகங்களில் சஞ்சாரம் செய்யத் தொடங்கியது

அண்டத்தின் விளிம்பையடைந்த நிலையில்
சிற்றொளியாயிருந்த அப்பிழம்பு
அதனையொத்த ஒளிக்கற்றைகளுடனிணைந்து
பேரொளியாகப் பிரகாசிக்கத் தொடங்கியது

அண்டத்தைக் கடக்க
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நானங்கே

அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தேன்.!

No comments:

Post a Comment