Sunday 10 August 2014

உடுத்திக் கொள்
















உணர்வுகளை பிழிந்தெடுத்து உலர்த்தி
சொட்டும் ஒவ்வொரு துளியிலும்
ஆழ்மன ஓசை அபரிமிதமாய் வழிவதை
தனித்திருக்கும் அறையில் பிண்டமாயிருந்து
சாளரத்தின் வழி ரசிக்கின்றேன்.

ஓங்கிய கதிரவனின் சுடர்பட்டு
அகமிருந்து விலகாத துளிகளும்
பாஸ்பரஸாய் பறந்த வெளியில்
கரைந்து போவதையும் காண்கின்றேன்.

உலர்ந்தபின் அதையெடுத்து
கிழிந்த பகுதிகளில் ஒட்டுவித்து உடுத்தி
மேலும் சில உள்ளுணர்வுகளைக் கொட்டி
ஈரமாக்கி வைக்க நினைக்கின்றேன்,

என்றேனும் நீ வருவாய்,
எனையெடுத்து உலர்த்தி உனதென்று
உடுத்திக் கொள்வாயென்ற எதிர்பார்ப்புடன்..!

2 comments:

  1. உணர்வுகளை அலசி உலர்த்திய வரிகளில் ஈரமாகிறேன் நான்

    ReplyDelete
  2. மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete