Saturday 22 August 2015

இனி என்ன நடக்கும்
























இருளடர்ந்த கொடும்பாதையில்
கைத்தடியுமற்ற அந்தனின் தளர்ந்த நடையுணர்ந்து
ஒளியூட்ட வந்தவொரு விளக்கு
எல்லைவரை உடனிருந்து
எத்தவைக்குமென இருமாந்திருந்தான்

விழியற்றவனின் இறுமாப்பு
வீதியோர சாக்கடையில்
வீழ்த்தப்படுமென உணராது
உரிமையுடன் விளக்கை
உற்று உற்றுப் பார்த்து நடந்தான்

பஞ்சடைந்த விழிகளில்
படர்ந்த வெளிச்சம் சிறிதெனினும்
அரவங்களை தவிர்ப்பதற்கு
அது போதுமாயிருந்தது

வரப்போகும் அதிகாலை வெளிச்சம்
போதுமெனச் சொல்லி
விடியலுக்கு முன்பான கருக்கலின் மையிருட்டில்
கை நழுவிப் போனதந்த திருவிளக்கு

தவிப்புடன் கைதுழாவியவனின் கண்களில்
தூரேயொரு வெளிச்சம் தெரிகிறது

அதற்கப்பால் புகைவண்டியின் சப்தமும் கேட்கிறது
எனினும் கிட்டிய வெளிச்சத்தை பற்றிக் கொள்ள
நடந்துகொண்டிருக்கிறான்

இனி என்ன நடக்கும்?

No comments:

Post a Comment