Saturday 22 August 2015

நெடுஞ்சாலை

















எந்நாளும் ஓய்வில்லாத
பல்லாயிரக்கணக்கான வாகனங்கள்
மிதிவண்டி தொடங்கி
பேருந்து வரை
பேதமின்றி உருண்டபடி
கனரக வாகன்ங்களும்
கட்டை வண்டிகளும் கூட
களைப்பின்றி பிரயாணித்தபடி
அவசரக் குடுக்கைகளின்
ஆவேசத் திருகலில்
அடிபட்டுத் தெறிக்கும்
இரத்தத் துளிகளின் வாடை
எனக்குப் பிடிக்கவில்லையென
யாரிடம் சொல்ல
உறக்கமில்லா யாத்திரைகளும்
ஓய்வில்லா ஓட்டுநர்களின்
பிழையான விரட்டல்களும்
கொலையுதிர்சாலையாய் எனை
கோரமாக சித்தரிப்பதை
நான் விரும்பவில்லையென
எவ்விதம் சொல்ல
எவ்வாறாயினும்
இனிதான பயணத்திற்கு
என்னை உபயோகப் படுத்துபவருக்கு
நானென்றும் உதவுபவனாகவே
மனிதர்கள்தான் தம்மிலும் எம்மிலும்
தரம் பிரித்துக்கொண்டிருக்கின்றார்கள்
நானெப்போதும்
அனைவரையும் ஒருபோலே ஏற்று
பயணப்பட உதவி செய்துகொண்டுதான் இருக்கிறேன்
மகத்தானப் பிறப்பாம் இம் மனிதவுயிர்களின் மகத்துவம் உணர்வீரா
சாலைப் பயணங்களில் மாண்டு போகத் துடிக்கும்  மாண்பு மிக்கோரே

No comments:

Post a Comment