Thursday 27 August 2015

கண்ணீரெனும் ஆயுதம்

















அவ்வழக்காடு மன்றத்தில்
தீர்ப்பாளாராகவும்
வழக்காடுபவராகவும் அவளேயிருக்க

கூண்டில் நிறுத்தப்பட்ட எனக்கு
கேள்விகளுக்கான பதிலளிக்க
அதிகாரமளிக்கப்படாத நிலையில்

வீசப்பட்ட வினாக்களின் வீரியத்தில்
விடையளிக்க இயலாமலும் போக

குற்றம் நிரூபிக்கப்பட்டு
தண்டனை உறுதி செய்யப்படுமெனும் எண்ணத்தில்

ஏவுகணைகளை எதிர்கொள்ளத் தயாராக
இரு செவிகளையும் மடக்கி
கேடயமாக்கி காத்திருந்தேன்

அந்தோ அந்நொடி
அவள் விழியுதிர்த்த ஒற்றைத்துளியில்
என் சகலமும் ஆடிப்போக
எண்சாண் உடலை வீழ்த்திச்
சரணடைந்தேன்

என்ன ஒரு ஆயுதமடா சாமி….!!!!

No comments:

Post a Comment