Saturday 22 August 2015

எங்கு சென்றாயடி


























எங்கு சென்றாயடி எந்தன் சிரிப்பழகி

வார்த்தையின் விளிம்புகளில்
சிரிப்பினை தேக்கிவைத்து
செல்லப் பெயர் கொண்டுனை அழைக்கையில்
சங்கீதச் சிரிப்பொன்றை சிதறவிடும்
மாருதியின் சித்திரமும் பழிக்கும்
மேனகைப் பேரழகே
எங்கு சென்றாயடி

அன்பின் அதீதத்தை
அகப்பையில் பதுக்கிவைத்து
சொல்லவொணா கோபத்தை
பொறித்தக் கடுகாய் பொழிந்துவிட்டு
அடுத்த நொடி அரவணைத்து
அழுமெந்தன் கோகிலமே
எங்கு சென்றாயடி

வாழ்க்கை தந்த ரணங்களையும்
அதில் விளைந்த வலிகளையும் மறைத்து
ம் மென்ற ஒற்றைச் சொல்லில் மென்றபடி
விழி துளிர்க்க மொழி கடக்கும்
விந்தையுருவான எந்தன்
வான் மயங்கும் வெண்ணிலவே
எங்கு சென்றாயடி

இன்றிரவே வந்து என்
நெற்றிமுடியூதி
பிடித்ததென நீ கேட்கும்
நுதல் முத்தத்தை எனக்குத் ஈந்து
அகங்குளிர்ந்து
முகமலர்ந்து
ராதிகா சிரிப்பொன்றை
ரத்தினமாய் வழங்கிடவேனும்

உடனே வந்திடடியென்
உலகாளும் தேவதையே!

No comments:

Post a Comment