எங்கு சென்றாயடி எந்தன் சிரிப்பழகி
வார்த்தையின் விளிம்புகளில்
சிரிப்பினை தேக்கிவைத்து
செல்லப் பெயர் கொண்டுனை அழைக்கையில்
சங்கீதச் சிரிப்பொன்றை சிதறவிடும்
மாருதியின் சித்திரமும் பழிக்கும்
மேனகைப் பேரழகே
எங்கு சென்றாயடி
சிரிப்பினை தேக்கிவைத்து
செல்லப் பெயர் கொண்டுனை அழைக்கையில்
சங்கீதச் சிரிப்பொன்றை சிதறவிடும்
மாருதியின் சித்திரமும் பழிக்கும்
மேனகைப் பேரழகே
எங்கு சென்றாயடி
அன்பின் அதீதத்தை
அகப்பையில் பதுக்கிவைத்து
சொல்லவொணா கோபத்தை
பொறித்தக் கடுகாய் பொழிந்துவிட்டு
அடுத்த நொடி அரவணைத்து
அழுமெந்தன் கோகிலமே
எங்கு சென்றாயடி
அகப்பையில் பதுக்கிவைத்து
சொல்லவொணா கோபத்தை
பொறித்தக் கடுகாய் பொழிந்துவிட்டு
அடுத்த நொடி அரவணைத்து
அழுமெந்தன் கோகிலமே
எங்கு சென்றாயடி
வாழ்க்கை தந்த ரணங்களையும்
அதில் விளைந்த வலிகளையும் மறைத்து
ம் மென்ற ஒற்றைச் சொல்லில் மென்றபடி
விழி துளிர்க்க மொழி கடக்கும்
விந்தையுருவான எந்தன்
வான் மயங்கும் வெண்ணிலவே
எங்கு சென்றாயடி
அதில் விளைந்த வலிகளையும் மறைத்து
ம் மென்ற ஒற்றைச் சொல்லில் மென்றபடி
விழி துளிர்க்க மொழி கடக்கும்
விந்தையுருவான எந்தன்
வான் மயங்கும் வெண்ணிலவே
எங்கு சென்றாயடி
இன்றிரவே வந்து என்
நெற்றிமுடியூதி
பிடித்ததென நீ கேட்கும்
நுதல் முத்தத்தை எனக்குத் ஈந்து
அகங்குளிர்ந்து
முகமலர்ந்து
ராதிகா சிரிப்பொன்றை
ரத்தினமாய் வழங்கிடவேனும்
நெற்றிமுடியூதி
பிடித்ததென நீ கேட்கும்
நுதல் முத்தத்தை எனக்குத் ஈந்து
அகங்குளிர்ந்து
முகமலர்ந்து
ராதிகா சிரிப்பொன்றை
ரத்தினமாய் வழங்கிடவேனும்
உடனே வந்திடடியென்
உலகாளும் தேவதையே!
No comments:
Post a Comment