Saturday 8 November 2014

மேலுமொரு கவலை


















ஒவ்வொரு படியிலும் கூடிய வேதனையின் முனகல்கள்
உச்சம் தவிர்த்திட உள்ளூரும் ஆசை
நடப்பதை விடுத்து தவழலாமாவெனும் கேள்வி

இடையிடையே இயக்கத்தை நிறுத்தி
சும்மாவிருத்தலில் மிகுந்தெழும் ஆவலுடன்
மேலேறிய பயணத்தில்
தோளேறிய வேதாளமாய்
கவலைகள் கழுத்தை கவ்வ

சுமந்து நடப்பதற்கு
வீழ்ந்து கிடப்போமென விரும்பியபோது
சுமை கூடி மூச்சுமுட்ட
முக்கி முனகி மேலெழுந்து
அடுத்தபடியை அடைந்தேன்
மேலுமொரு கவலை யெனை ஆட்கொள்ள..!

No comments:

Post a Comment