Saturday 8 November 2014

நிழல்














என் சுவடுகளை ஒட்டிகொண்டு எங்கும் திரிகிறாய்
எனது பாதைகள் உனக்கானதாய் நீள்கின்றன.
அகமும் புறமும் இருளாகும் பொழுதினில்
அகப்படாமல் ஒளிகிறாய்.
உறுத்தும் உச்சிப்பொழுதுகளில்
காலடியில் காணாமல் கரைந்துவிடுகிறாய்.
தன் பார்வைகளால் உன்னை காண்பவர்
என்னை அளவீடு செய்கின்றனர்.
நீ நிஜம், நான் நிழல்,
பலர் பார்வைக்கு..
இப்போதெல்லாம்,
என்னைபற்றி நான் தெரிந்துகொள்ள
உன்னை படிக்கிறேன்,
பிற நிழல்களில் பதுங்குகையில் மட்டுமே
உன்னை விலக்குகிறேன்.
நான்தான் நானென பிறர் அறிய
வெளிச்சத்திற்கு வர விழைகிறேன்.
நீயற்ற நான் நிலைபடும் பொழுதிற்கான
நிஜம் உணர்த்தும் பயணம் தேடி

நெடுந்தொலைவு யாத்திரை தொடங்கிவிட்டேன்.

No comments:

Post a Comment